கோவை: பழைய பெயர் பலகையை மாற்றாமலேயே முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சட்டமன்ற அலுவலகத்தை திறந்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட எஸ்பி வேலுமணி வெற்றி பெற்றார்.
அதனைத் தொடர்ந்து ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள தொண்டாமுத்தூர் தொகுதிக்கான சட்டமன்ற அலுவலகத்தை எஸ் பி வேலுமணி திறந்து வைத்தார்.
அதே சமயம் சட்டமன்ற அலுவலகத்தில் கடந்த ஆட்சியின் போது வைக்கப்பட்டிருந்த பெயர் பலகை அகற்றப்படாமல் அப்படியே வைக்கப்பட்டுள்ளது. அதில் இவர் வகித்த அரசு பொறுப்பும் கட்சி சார்ந்த பொறுப்பும் உள்ளன.
“கழக தலைமை நிலைய செயலாளர், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா” என்ற பெயர் பலகை மாற்றபடாமல் உள்ளது. அரசு சார்பில் தற்பொழுது இவர் சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா இல்லை, கட்சி சார்ந்து இவரது வகித்த கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் என்ற பதவி இவரிடமிருந்து பறிக்கப்பட்டு செ.ம
வேலுச்சாமிக்கு வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


