கோவை : கோவை சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக வந்த 64 வயது முதியவர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கே.கே.புதூர், சின்ன சுப்பண்ணன் வீதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (64) என்பவர், தனது உறவினர் பாக்கியராஜ் ரூ.8 லட்சம் கடன் வாங்கிவிட்டு திருப்பித் தராமல் ஏமாற்றியதாக சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகார் தொடர்பான விசாரணைக்காக சம்பவத்தன்று மதியம், தனது மனைவி ரேணுகா தேவியுடன் ராஜேந்திரன் சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்திற்கு வந்தார்.
Also Read: சிங்காநல்லூரில் கோயிலுக்கு சென்ற பெண் மாயம்; இருசக்கர வாகனம் மட்டும் மீட்பு
போலீஸ் நிலையத்தின் முதல் மாடியில் விசாரணைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருந்தபோது, ராஜேந்திரனுக்கு திடீரென கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
உடனடியாக போலீசார் மற்றும் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரது நாடித்துடிப்பு குறைவாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
Also Read: பார்ட்டி பண்ட் பற்றி திமுகவில் இருக்கும் போது தெரியாது- CPIM சண்முகம் பேட்டி..
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், ராஜேந்திரன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து சாய்பாபா காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து, உயிரிழப்புக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


