Coimbatore Powercut: கோவையில் 4 ஜூலை ஆம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் வாரம் ஒரு முறை மின்வாரியத்தால் மின்தடை ஏற்படுத்தப்படும். இந்த நாளில் மின்வாரிய ஊழியர்கள் பழுதுகளை சரி பார்த்தல் மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வார்கள்.
அதன்படி, மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவையில் நாளை (சனிகிழமை) பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது.
மதுக்கரை துணை மின் நிலையம்
கே.ஜி.சாவடி (K.G. Chavadi), பாலத்துறை (Palathurai), பைபாஸ் ரோடு (Bypass Road), சாவடி புதூர் (Chavadi Pudur), காளியாபுரம் (Kaliyapuram), எட்டிமடை (Ettimadai), எம்.ஜி.ஆர். நகர் (M.G.R. Nagar), சுகுணாபுரம் (Sugunapuram), பி.கே.புதூர் (P.K. Pudur), மதுக்கரை (Madukkarai), அறிவொளி நகர் (Arivoli Nagar), கோவைப்புதூர் (Kovaipudur – ஒரு பகுதி) ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
பராமரிப்பு பணிகள் திட்டமிட்ட நேரத்திற்குள் நிறைவடைந்தால், அதற்கு முன்னரே மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என்றும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


