Coimbatore Powercut: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!

Coimbatore Powercut: கோவையில் 4 ஜூலை ஆம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் வாரம் ஒரு முறை மின்வாரியத்தால் மின்தடை ஏற்படுத்தப்படும். இந்த நாளில் மின்வாரிய ஊழியர்கள் பழுதுகளை சரி பார்த்தல் மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வார்கள்.

Advertisement

அதன்படி, மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவையில் நாளை (சனிகிழமை) பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது.

கே.ஜி.சாவடி (K.G. Chavadi), பாலத்துறை (Palathurai), பைபாஸ் ரோடு (Bypass Road), சாவடி புதூர் (Chavadi Pudur), காளியாபுரம் (Kaliyapuram), எட்டிமடை (Ettimadai), எம்.ஜி.ஆர். நகர் (M.G.R. Nagar), சுகுணாபுரம் (Sugunapuram), பி.கே.புதூர் (P.K. Pudur), மதுக்கரை (Madukkarai), அறிவொளி நகர் (Arivoli Nagar), கோவைப்புதூர் (Kovaipudur – ஒரு பகுதி) ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

பராமரிப்பு பணிகள் திட்டமிட்ட நேரத்திற்குள் நிறைவடைந்தால், அதற்கு முன்னரே மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என்றும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் ஒரு வாரத்திற்கு பிறகு அடையாளம் கண்டுபிடிக்கப்பட்ட பெண் சடலம்…

கோவை: சுமார் ஒரு வாரம் கழித்து இறந்த பெண் யார் என காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். கடந்த 24 ஆம் தேதி கோவை கோவைபுதூர் பகுதியில் நிர்வாண கோலத்தில் இளம் பெண் சடலமாக மீட்கப்பட்ட நிலையில்...

Video

கோவையில் பார்க்கிங்கில் இருந்த வாகனங்களின் சீட்டை கிழித்த நபர்- சிசிடிவி காட்சிகள்…

கோவை டவுன்ஹால் பகுதியில் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களின் இருக்கைகளை பிளேடால் சேதப்படுத்திய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.