Header Top Ad
Header Top Ad

12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது- கோவையில் கல்லூரிகளுக்கு படையெடுக்கும் மாணவர்கள்…

கோவை: பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து கல்லூரிகளுக்கு மாணவ மாணவிகள் படையெடுத்து வருகின்றனர்…

இன்றைய தினம் 12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. அதில் கோவை மாவட்டம் மாநில அளவில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து மாணவர்கள் அவர்களது பெற்றோர்களுடன் பல்வேறு தனியார் கல்லூரிகளில் கலை அறிவியல் படிப்புகளில் சேர்வதற்கு தொடர்ந்து வருகை புரிந்து வருகின்றனர்.

Advertisement
Lazy Placeholder

மதிப்பெண் அடிப்படையில் அவர்களுக்கு பிடித்தமான பாடபிரிவை தேர்வு செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி கல்லூரி நிர்வாகங்கள் சார்பிலும் ஒவ்வொரு மதிப்பெண்கள் அடிப்படையில் எந்த பாடப்பிரிவு எடுத்தால் நன்றாக இருக்கும் வருங்காலத்தில் என்னென்ன வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

Recent News

Latest Articles