பா.ஜ.க வை 2026 தேர்தலில் சூரசம்ஹாரம் செய்வார் முருகன்- கோவையில் செல்வ பெருந்தகை பேட்டி

கோவை; பா.ஜ.க வேசம் சில மக்களை ஏமாற்றலாம், தமிழ்க் கடவுள் முருகனை ஏமாற்ற முடியாது கடவுள் முருகன் இருக்கிறார் என்றால் பா.ஜ.கவை 2026 தேர்தலில் சூரசம்ஹாரம் செய்வார் என காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்…

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் பேசிய இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வ பெருந்தகை இவ்வாறு தெரிவித்து உள்ளார்:-

கூட்டணி குறித்த முடிவு இந்திய காங்கிரஸ் கமிட்டி தான் எடுக்க வேண்டும் எனவும் ஏற்கனவே இந்தியா கூட்டணி வலிமையாக இருக்கிறது. வலுவாக இருக்கிறது. எல்.முருகன் கூறுவது போன்றோ, பா.ஜ.க தலைவர் கூறுவது போன்றே இந்த கூட்டணி இல்லை.எங்கு எந்த விதமாக ஓட்டையும் கிடையாது, நெல்லிக்காய் மூட்டை தான் சிதறும். சிதறதுவதற்கு இது நெல்லிக்காய் மூட்டை கிடையாது. இது எக்கு கோட்டை கூட்டணி. இது சிதறுவதற்கு வாயுப்புகள் இல்லை என தெரிவித்தார். சின்ன , சின்ன பிரச்சனைகள் இருந்தால் நாங்கள் பேசி தீர்த்துக் கொள்வோம் என தெரிவித்த செல்வபெருந்தகை,அதிமுகவும் பா.ஜ.க வும் பகல் கனவு காண்கிறார்கள். ஏதாவது குளிர் காயலாமா ? ஆதாயம் ஏற்படுமா ? என, ஒரு ஆதாயமும் ஏற்படாது எந்த குளிரும் காய முடியாது. தமிழக மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என தெரிவித்தார்.

முருகன் மாநாடு தொடர்பான கேள்விக்கு, யாரெல்லாம் பாசிச சக்தியோடு இணைந்து இருக்கிறார்களோ ? அவர்களை தமிழ் மக்கள் புறக்கணிப்பார்கள். தமிழ் கடவுள் முருகன் புறக்கணிப்பார். தமிழகத்தில் முருகன் மாநாடு எதற்காக நடத்துகிறார்கள் அயோத்தியில் ராமர் நாடியதற்காக நடத்தினார்கள் ? என கேள்வி எழுப்பியதோடு, அயோத்தியில் ராமர் பா.ஜ.க வை கைவிட்டு விட்டார். மக்களை நம்பி பா.ஜ.க கிடையாது. மதத்தை வைத்து அரசியல் செய்கிறது பா.ஜ.க எனவும் இதுவரை மணிப்பூருக்கு பிரதமர் போகவில்லை. மணிப்பூருக்கு செல்லாமல் இங்கே முருகன் மாநாடு என்றால் முருகன் மன்னித்து விடுவாரா ? எனவும் தமிழகத்திற்கு வர வேண்டிய கல்வி தராமல் மறுதலைக்கிறார்கள், தமிழ் கடவுள் முருகன் இருக்கிறார் என்றால் பா.ஜ.க வை 2026 தேர்தலில் சூரசம்ஹாரம் செய்வார் எனவும் தமிழ் கடவுள் முருகனை ஏமாற்றி வேஷம் போட முடியுமா ? பா.ஜ.க வேசம் சில மக்களை ஏமாற்றலாம். முருகனை ஏமாற்ற முடியாது என தெரிவித்தார்.

Advertisement

ஆங்கிலம் தொடர்பான அமிஷ்தாவின் பேச்சு தொடர்பான கேள்விக்கு,

அமித்ஷாவின் மகனே ஆங்கிலேயர் உருவாக்கிய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருக்கிறார், ஒடுக்கப்பட்ட, விளிம்பு மக்களே தற்போது ஆங்கிலம் பேசுகிறார்கள். அங்கேயும் அரசியல் இருக்கிறது, இவர்கள் ஆங்கிலம் பேசுவது அவர்களுக்கு பிடிக்கவில்லை எனவும் இ.பி.எஸ் ஆங்கில சொல்லா ? அல்லது தமிழ்சொல்லா ?, எடப்பாடி பழனிச்சாமையை பார்த்து இ.பி.எஸ். என்கிறார் அமித்ஷா . அவ்வாறென்றால் இ.பி.எஸை அவமானபடுத்துகிறாரா? எனவும், காங்கிரஸ் இருக்கும் வரை தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை. இவர்கள் வந்த பிறகு மூன்றாவது மொழியை திணிக்கிறார்கள், தமிழ் கடவுள் முருகன் இருக்கிறார். என்கிறார்கள் முருகன் இருக்கிறார் என்றால் இவர்களை எப்படி ஏற்றுக் கொள்வார் ? என தெரவித்தார்.

Advertisement

தமிழ் மொழியை சிதைக்கிறீர்கள், தமிழ் மொழியில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்றால் தமிழ் கூடாது சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்ய வேண்டும் என கூறுகிறீர்கள். அப்போது தமிழ் கடவுள் முருகன் ஏற்றுக் கொள்வார்கள் ? தமிழகத்திற்கு துரோகம் செய்கிறீர்கள்.தமிழ் கடவுள் முருகன் இருக்கிறார் என்றால் சூரசம்காரம் 2026 தேர்தலில் செய்வார் என சாடினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் விபூதி அழித்தது தொடர்பான கேள்விக்கு, விபூதி வைத்ததற்கு எரிச்சல் இருந்து இருக்கும் அல்லது உபாதை இருந்து இருக்கும் அதனால் அழித்து இருப்பார்கள் விபூதி அளிப்பது என்பது அரசியல், அதை அரசியல் படுத்த கூடாது என தெரிவித்தார்..

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கலைஞர் கருணாநிதி நினைவு தினம்- கோவையில் அஞ்சலி…

கோவை: முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. தமிழக முன்னாள் முதல்வரும் திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 8ம் ஆண்டு...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை: கோவையில் வாடிக்கையாளர் போல் வந்து ஐபோனை திருடி சென்ற பெண் மீண்டும் செல்போனை திருப்பி ஒப்படைத்தார். கோவை மாநகர், காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம் முன்பு உள்ள செல்போன் கடை ஒன்றில் கடந்த...