கோவை குற்றாலம் மீண்டும் அன்புடன் அழைக்கிறது!

கோவை: வெள்ளப்பெருக்கால் மூடப்பட்ட கோவை குற்றாலம் 8 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திறக்கப்பட்டது.

Advertisement

மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது கோவையின் பிரதான சுற்றுலாத்தலமான கோவை குற்றாலம் சூழல் சுற்றுலாத்தலம்.

கோவை மட்டுமல்லாது பல்வேறு மாவட்ட மக்களும் வந்து செல்லும் இடமான இங்கு அதிக மழைப்பொழிவு காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் கோவை குற்றாலம் அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால் கடந்த மே 23ம் தேதி மூடப்பட்ட கோவை குற்றாலம் சுமார் 50 நாட்களுப் பிறகு இம்மாதம் 11ம் தேதி தான் திறக்கப்பட்டது.

Advertisement

நீண்ட நாட்களுக்குப் பிறகு கோவை குற்றாலம் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், கடந்த 23ம் தேதி மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கோவை குற்றாலம் மூடப்பட்டது.

கோவை குற்றாலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு வீடியோ காட்சிகள் இங்கு காணலாம்:-

Advertisement

இதனிடையே தற்போது அருவிகளில் நீர் வரத்து சீராகியுள்ளதால், இன்று முதல் கோவை குற்றாலம் செல்ல சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

கோவையில் தற்போது லேசாக வெப்பம் அதிகரித்துள்ள நிலையில், கோவை குற்றாலம் போனால் ஜில்லுன்னு ஒரு குளியல் போட்டுவிட்டுத் திரும்பலாம்.

Join our WhatsApp Group for Coimbatore Updates

kovai kutralam 2

கோவை குற்றாலத்திற்குச் செல்ல தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வனத்துறை அனுமதி வழங்குகிறது. மாலை 6 மணிக்கு மேல் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை.

கோவை குற்றாலத்தில் பெரியவர்களுக்கு ரூ.60, சிறுவர்களுக்கு ரூ.25 என்ற நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. திங்கட்கிழமைகளில் கோவை குற்றாலம் விடுமுறை.

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் நாளை போக்குவரத்து மாற்றம்…

கோவை: விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தை முன்னிட்டு நாளை கோவையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. கோவை மாநகரில் நாளை 16.09.2026 ஆம் தேதி புதன் கிழமை விநாயகர் சிலை ஊர்வலமானது 12.00 மணிக்கு குனியமுத்தூர்...

Video

தடாகத்தில் மீண்டும் வேட்டையன்- மக்கள் அச்சம்…

கோவை: தடாகம் நஞ்சுண்டாபுரம்மீண்டும் வலம் வந்த வேட்டையன்காட்டுயானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை தடாகம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் நள்ளிரவில் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் வலம் வந்த வேட்டையன் என்ற ஒற்றை காட்டு யானை செடி,...