கோவை செம்மொழி பூங்கா முன்பு தூய்மை பணியாளர்களின் அவல நிலை

கோவை: கோவையில் கட்டப்பட்டு வரும் செம்மொழிப் பூங்கா முன்பு பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் சாக்கடை தூய்மை பணியை மேற்கொண்டது கண்டனத்திற்குள்ளாகி உள்ளது.

கோவை பார்க் கேட் பகுதியில் செம்மொழிப் பூங்கா பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் செம்மொழிப் பூங்கா அமைய உள்ள பகுதியில் பிரதான சாலையில் இருந்த சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் ஐந்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

Advertisement

அவர்கள் அனைவரும் கையுறை, முக கவசம் உள்ளிட்ட எந்தவித பாதுகாப்பு உபகரணங்களையும் பயன்படுத்தாமல் தூய்மை பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

இதனால் எளிதில் நோய் தொற்றும் சூழலில் அபாயகரமான நிலையில் அவர்கள் பணிகளை மேற்கொண்டு இருந்தது பேசு பொருளாகி உள்ளது.

Advertisement

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் அடிக்கடி இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பதை தடுக்க ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சி மாவட்ட அதிகாரிகள் கண்டிப்புடன் கூடிய அறிவுரையை வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Recent News

18வது கோயம்புத்தூர் விழா நடைபெறும் தேதியும் முக்கிய நிகழ்வுகளும் அறிவிக்கப்பட்டன…

கோவை: கோயம்புத்தூர் விழாவின் 18வது பதிப்பு கோலாகலமாக துவக்கியது. கோவை மாநகர் ஒவ்வொரு ஆண்டும் கோயம்புத்தூர் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோவையை சேர்ந்த பல்வேறு அமைப்புகளும், மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து இந்த கோயம்புத்தூர்...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது. கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Join WhatsApp