ஏழைகளே கவலை வேண்டாம்: போத்தனூரில் மாநகராட்சி அமைக்கிறது டயாலிசிஸ் மையம்!

கோவை: போத்தனூர் பகுதியில் மாநகராட்சி சார்பில் ரூ.98.70 லட்சம் மதிப்பில் புதிய டயாலிசிஸ் மையம் அமைப்பதற்கான பண்கள் தொடங்கியுள்ளன.

கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம் போத்தனூர் சத்திரம் வீதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.98.70 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக டயாலிசிஸ் மையம் கட்டும் பணியினை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

முதலமைச்சரின் வழிகாட்டுதலின் படி கோயம்புத்தூர் மாநகராட்சி, கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் என ஐந்து மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த டயாலிசிஸ் மையம் கட்டப்படுகிறது.

பணிகளை விரைவாக மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதில் டயாலிசிஸ் சென்டர், நெகடிவ் மற்றும் பாசிட்டிவ் டயாலிசிஸ் அறைகள், மருத்துவ அதிகாரி அறை, பணியாளர் அறை, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனியான கழிப்பறைகள், இருப்பு அறை உள்ளிட்டவை இடம்பெறுகின்றன.

இதனால் போத்தனூர், குறிச்சி, கோணவாய்க்கால்பாளையம், ஆத்துப்பாலம், நஞ்சுண்டாபுரம் மற்றும் குறிச்சி பிரிவு போன்ற பகுதிகளிலுள்ள சர்க்கரை நோயாளிகள் பயன்பெறுவார்கள்.

Advertisement

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

திமுக கூட்டணி கலகலத்து விட்டது- கோவையில் நயினார் நாகேந்திரன் பேச்சு…

கோவை: தி.மு.க கூட்டணி கலகலத்து விட்டது என பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். கோவை, வடவள்ளி கல்வீரம்ப்ளையம் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மோடி முகாம் நடைப்பெற்றது. இந்த முகாமில்...

Video

ஆட்டோவில் கிடைத்த தங்க நகை… வீடு தேடி ஒப்படைத்த கோவை டிரைவர் – வீடியோ காட்சிகள்

ஆட்டோவில் தவறவிட்ட ஒரு பவுன் தங்க பிரேஸ்லெட்டை வீடு தேடி சென்று ஒப்படைத்த கோவை டிரைவர் மணிகண்டன் பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.
Join WhatsApp