கோவையில் திடீர் பள்ளம்- சிக்கிய லாரி…

கோவை: கோவையில் சாலையின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தில் லாரி சிக்கியது.

கோவை மாநகர் மணியகாரம்பாளையம் பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் முடிந்து சில தினங்கள் ஆகிறது. அதற்காக போடப்பட்ட புதிய சாலையில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கிக் கொண்டுள்ளது.

அப்பொழுது அப்பகுதியில் எந்த வாகனமும் செல்லாததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. உடனடியாக லாரியில் இருந்தவர்கள் சுதாரித்து கீழே இறங்கினர்.

Advertisement

தற்பொழுது போடப்பட்ட புதிய சாலை திடீரென பள்ளம் ஏற்பட்டு லாரி சிக்கிக்கொண்ட சம்பவத்தால் அப்பகுதி பொதுமக்கள் சாலையில் செல்ல அச்சம் அடைந்து உள்ளனர்.

மேலும் நீண்ட தூரத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். தற்போது அந்த காட்சிகள் வெளியாகி உள்ளது.

கோவை மாநகரில் பல்வேறு பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வந்தாலும் பணிகள் முடிந்த பிறகு தரமான சாலைகளை அமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் நேற்று எங்கு எவ்வளவு மழை பதிவு?

கோவையில் நேற்று பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் மொத்தம் 131 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக தகவல் வெளியானது

Video

கோவையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து- பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்…

கோவை: செட்டிபாளையம் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. கோவை மாநகர போத்தனூர்- செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடேனில்...