கோவையில் தேசிய காப்பீட்டு நிறுவனம் சார்பில் விழிப்புணர்வு பேரணி…

கோவை: கோவையில் தேசிய காப்பீட்டு நிறுவனம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

சாலை பாதுகாப்பு மாதம் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அரசு சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கோவை மாவட்டத்திலும் மாவட்ட நிர்வாகம், மாநகர காவல்துறை, போக்குவரத்து காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

விழிப்புணர்வு நடைபயண பேரணி, வாகன பேரணி, ஹெல்மெட் வழங்கி விழிப்புணர்வு போன்ற பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது.

அதன் தொடர்ச்சியாக இன்று கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் தேசிய காப்பீட்டு நிறுவனம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இதில் தேசிய காப்பீட்டு நிறுவன அலுவலர்கள், ஊழியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மெதுவாக வாகனங்களை இயக்க வேண்டும், காப்பீடு செய்து கொள்ள வேண்டும், சாலை பாதுகாப்பு குறித்து என்றென்றும் விழிப்புடன் இருக்க வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணி மேற்கொண்டனர்.

முன்னதாக சாலை பாதுகாப்புக்குறித்து கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து காப்பீட்டு நிறுவனம் பணியாளர்கள் அலுவலர்கள் பொதுமக்கள் என பலரும் கையெழுத்திட்டனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் 90 பறக்கும் படைக்குழு அமைப்பு…

கோவை: கோவை மாவட்டத்தில் 90 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 13,08,898 பேரும் பெண் வாக்காளர்கள் 14,05,246 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 532...

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.