மாங்கரை அருகே திகில்.. சுற்றுலா பயணியை துரத்திய ஒற்றை யானை- வீடியோ

கோவை: கோவை அருகே ஆனைகட்டி பகுதியில் காட்டு யானை விரட்டியதால் வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் நாட்டைச் சேர்ந்த எடிஸ்லாவ் லியன் (38) என்பவர் நேற்று காலை மோட்டார் பைக்கில் ஆனைகட்டி வழியாக பயணம் செய்து கொண்டிருந்தார். மாங்கரை சலங்கை பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, சாலையோரத்தில் தனது பைக்கை நிறுத்திவிட்டு அருகிலிருந்த காட்டுப்பகுதிக்குள் சென்றதாக கூறப்படுகிறது.

அந்த நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒற்றை காட்டு யானை அவரை நோக்கி வந்துள்ளது. யானையை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணி அங்கிருந்து வேகமாக ஓடியுள்ளார்.

Advertisement

சில தூரம் அவரை துரத்திச் சென்ற யானை பின்னர் வனப்பகுதிக்குள் திரும்பிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

உயிர் பயத்தில் ஓடியபோது, எடிஸ்லாவ் லியன் கால் தடுக்கி அருகிலிருந்த பள்ளத்தில் விழுந்து சிறு காயமடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் விரைந்து சென்று அவரை மீட்டனர்.

பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

Advertisement

காயமடைந்த சுற்றுலா பயணி இந்தியாவின் பல பகுதிகளை சுற்றிப் பார்க்கும் பயணத்தில் இருந்ததாகவும், கேரளாவில் இருந்து வாடகை மோட்டார் பைக்கில் ஆனைகட்டி, மாங்கரை வழியாக ஊட்டி செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, அதே பகுதியில் சுற்றித்திரிந்த ஒற்றை காட்டு யானையின் வீடியோவை அங்கிருந்த சிலர் பதிவு செய்துள்ளனர்.

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், சுற்றுலா பயணியை யானை துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கணவர் மீது புகார் அளிப்பேன்- சூலூர் சிறுமியின் தாய் ஆவேசம்…

கோவை: சூலூரில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தந்தை மீது புகார் அளிப்பேன் என்று தாயார் தெரிவித்துள்ளார். கோவை சூலூரில் 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட நிலையில் சிறுமியின் தாயார் போத்தனூர் பகுதியில்...

Video

மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை விழுங்க முயன்ற 13 அடி ராட்சத மலைப்பாம்பு – பரபரப்பான மீட்பு!

மேட்டுப்பாளையம் பகுதியில் ஆட்டினை விழுங்க முயன்ற 13 அடி ராட்சத மலைப்பாம்பு மீட்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.