கோவை: அதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக செ.ம வேலுச்சாமி இன்று பதவி ஏற்று கொண்டார்.
சட்டமன்றத் தேர்தல் முடிந்ததை தொடர்ந்து அதிமுகவில் சி.வி.சண்முகம், எஸ் பி வேலுமணி உள்ளிட்ட எம்எல்ஏக்கள் சிலர் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்து பிறகு அந்த ஆதரவை திரும்ப பெற்றனர்.
இது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில் அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக பதவி வகித்த முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு மாற்றாக அந்த பதவியை செ.ம வேலுச்சாமிக்கு வழங்குவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து இன்று செ.ம.வேலுச்சாமி கோவை அண்ணாசிலை பகுதியில் உள்ள அதிமுக அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் கோப்புகளில் கையெழுத்திட்டு பதவி ஏற்றுக் கொண்டார்.
அவருக்கு கோவை மாவட்ட முன்னாள் அதிமுக எம்எல்ஏக்கள் பொள்ளாச்சி ஜெயராமன், பி.ஆர்.ஜி அருண்குமார், தாமோதரன், அம்மன் அர்ஜுனன், செல்வராஜ் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். மேலும் அதிமுக தொண்டர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.


