கோவை சரவணம்பட்டி கரட்டுமேடு முருகன் கோவிலில், ஜனநாயகன் திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்ற வேண்டுதலுடன் விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவர் மண் சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன் செலுத்திய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவையில் ஜனநாயகன் திரைப்படத்தை பார்த்த அமைச்சர்கள் சம்பத்குமார் மற்றும் விக்னேஷ் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் வடித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
கோவை காஸ்மோ திரையரங்கில் ஜனநாயகன் திரைப்படத்தின் முதல் காட்சி ஓடிக்கொண்டிருந்தபோது, தமிழக வெற்றி கழகத்தின் விசில் சின்னத்தை கையில் பச்சை குத்திக் கொண்ட கோவை கிழக்கு மாவட்டச் செயலாளர் விஜய் யுவராஜின் செயல் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது.
சேலத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி அனு ஸ்ரீ, கோவை வெங்கீஸ் பேட்மின்டன் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று, சீனாவில் நடைபெறும் ஏசியன் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இந்தியாவுக்காக பதக்கம் வெல்வதே தனது இலக்கு என தெரிவித்துள்ளார்.
கோவை போத்தனூரில் உள்ள அரசன் திரையரங்கில், முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்தை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பார்த்தார். துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பில் இருந்த காட்சிகள் கவனம் ஈர்த்தன.
கோவை கங்கா யமுனா காவேரி திரையரங்கில் ஜனநாயகன் திரைப்படத்தை பார்வையிட்ட அமைச்சர் சம்பத்குமார், "ரசிகன் என்பதே என்னுடைய முதல் அடையாளம்" என்று தெரிவித்தார். திரைப்படத்தை ரசிகர்கள் டிஜே நிகழ்ச்சி, பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.
கோவையின் பல்வேறு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பல பகுதிகளில் திட்டமிட்ட மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை சின்னியம்பாளையத்தில் பூட்டிய கேட்டின் அடிப்பகுதி வழியாக நுழைந்த மர்ம நபர், சுமார் ரூ.45 ஆயிரம் மதிப்பிலான காப்பர் கம்பிகளை திருடிச் சென்ற சம்பவத்தின் சி.சி.டி.வி. காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
ஜனநாயகன் திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு, "ஜனநாயகன் பாஸ்போர்ட்" என்ற மக்கள் விழிப்புணர்வு இயக்கத்தை கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. டாக்டர் கனிமொழி சந்தோஷ் தொடங்கி வைத்தார். பொறுப்புள்ள குடிமகனாக செயல்பட உறுதிமொழி எடுக்க ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.
கூகுள் டீப்மைண்ட் உலகளாவிய ஏஐ ஆராய்ச்சி போட்டியில் கோவையைச் சேர்ந்த ஐஐடி சென்னை மாணவர் அர்ஜுன் திலக் ரூ.24 லட்சம் பரிசை வென்று சாதனை படைத்தார். அவரது வெற்றியை அமைச்சர் சம்பத் குமார் நேரில் பாராட்டினார்.