கோவை: கோவையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோயம்புத்தூர், கோயம்புத்தூர் மகளிர்)ஆனைக்கட்டி,...
தமிழக சட்டம்-ஒழுங்கு டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் கோவையில் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, சட்டம்-ஒழுங்கு, போக்குவரத்து மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் செம்மொழி பூங்கா விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் தள்ளுமுள்ளுவாக மாறியது. தொடர்ந்து ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாகக் கூறி காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி இரண்டு மாதங்களுக்கு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கோவை செம்மொழி பூங்கா திட்டப் பணிகளில் ரூ.40 கோடி முறைகேடு நடைபெற்றதாக தென்மண்டல ஒப்பந்ததாரர்கள் சங்கம் புகார் அளித்துள்ளது. குற்றச்சாட்டுகள் தொடர்பாக முழுமையான தொழில்நுட்ப ஆய்வு மற்றும் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவையில் மதுப் பழக்கத்தால் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து தம்பதி இருவரும் விஷம் அருந்திய சம்பவத்தில், சிகிச்சை பெற்று வந்த கணவர் உயிரிழந்தார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை சூலூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர், மனைவியின் 80 பவுன் தங்க நகைகள் அபகரிக்கப்பட்டதாகக் கூறி உறவினர்கள் மீது நடவடிக்கை கோரி போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.
கோவையில் கார் அடமான விவகாரத்தில் ரூ.70 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூபதியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் உக்கடம் பேருந்து நிலையத்தில் கையும் களவுமாக கைது செய்தனர்.
கருமத்தம்பட்டி பகுதியில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 32 வயது நபரை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.