கோடை விடுமுறையிலும் கோவை கோர்ட்டில் விசாரணை

கோவை: கோடை விடுமுறையை முன்னிட்டு கோவை நீதிமன்றங்களில் இன்று ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்றது.

கோடை காலத்தை முன்னிட்டு வருகிற 31ஆம் தேதி வரை கோவை நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை வழங்கி Madras High Court உத்தரவிட்டுள்ளது.

Advertisement

இதன் காரணமாக கோவை மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்திற்கும் ஒரு மாத கால விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் மனுக்கள் வாரத்தில் ஒரு நாள் மட்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகளில் கடந்த புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

Advertisement

மேலும் வருகிற 13, 20 மற்றும் 27ஆம் தேதிகளில் மனுக்கள் தாக்கல் செய்யலாம் என்றும், 15, 22 மற்றும் 29ஆம் தேதிகளில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் தொடர்ந்து விசாரணை நடைபெறும் என்றும் நீதித்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

இளைஞர்கள் பைக் பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ உள்ளே…!

கோவை: கோவையில் அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கிய இளைஞர் நெஞ்சை பதற வைக்கும் பகீர் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பு. கோவையில் இளைஞர்கள் வாகனங்களை இயக்குவது அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வருகின்றனர். முறையாக...

Video

இளைஞர்கள் பைக் பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ உள்ளே…!

கோவை: கோவையில் அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கிய இளைஞர் நெஞ்சை பதற வைக்கும் பகீர் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பு. கோவையில் இளைஞர்கள் வாகனங்களை இயக்குவது அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வருகின்றனர். முறையாக...