கஞ்சா வழக்கில் கைதானவர்களுக்கு தண்டனை தீர்ப்பு வழங்கியது கோவை நீதிமன்றம்…

கோவை: கஞ்சா கடத்தல் வழக்கு இரண்டு பேருக்கு ஐந்தாண்டு சிறை மற்றும் அபராதம் விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

Advertisement

கஞ்சா கடத்தல் வழக்கில் இரண்டு பேருக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கோவை ரயில் நிலையத்துக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி வந்த ஒரு ரயிலில் இருந்து இரண்டு பேர் பைகளுடன் இறங்கினார்கள். சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் முன்னுக்குப் , பின் முரணாக பதில் அளித்தனர்.

இதனால் காவல் துறையினர் அவர்கள் வைத்து இருந்த பையை சோதனை செய்தனர். இதில் இரண்டு பேரிடமும் தலா 5 கிலோ விதம் மொத்தம் 10 கிலோ கஞ்சா இருந்தது. அவர்கள் ரயிலில் கஞ்சாவை கடத்தி வந்தது கோவையில் விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.

Advertisement

இதனை தொடர்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்திய போது. பிடிபட்டவர்கள் கோவை சிட்கோ பகுதியை சேர்ந்த ரவிக்குமார், பெலிக்ஸ் என்றும் தெரியவந்தது. இதை தொடர்ந்து இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை போதைப் பொருள் தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரணை நடத்திய நீதிபதி ராஜலிங்கம் குற்றம் சாட்டப்பட்ட ரவிக்குமார், பெலிக்ஸ் ஆகியோருக்கு ஐந்தாண்டு சிறை தண்டனையும், ரூபாய் 25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Advertisement

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவை விமான நிலையத்தில் இ சிகரெட், தங்கம் கைப்பற்றல்…

கோவை: ஏர் அரேபியா விமானத்தில் கோவை வந்த பயணியிடம் தங்கம் மற்றும் மின்னணு சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டது. கோவை சர்வதேச விமான நிலையத்தில் ஷார்ஜாவில் இருந்து வந்த ஆண் பயணியிடம் இருந்து ரூ.8.76 லட்சம்...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...