Coimbatore Power Cut: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மின்பராமரிப்புப் பணிகள் காரணமாக தமிழகம் முழுவதும் வாரம் ஒரு நாள் மின்தடை ஏற்படுத்தப்படுகிறது. இந்த நாளில், மின்வாரிய ஊழியர்கள் மின் வயர்கள் மீது உராயும் மரக்கிளைகளை வெட்டி அகற்றுதல், பழுதான கம்பிகளை மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்வார்கள்.
அந்த வகையில், கோவை மின்வாரியத்தின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (04.06.2026) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளிமடை துணை மின்நிலையம்:
காமராஜ் ரோடு (Kamaraj Road), பாலன் நகர் (Balan Nagar), சர்க்கரை செட்டியார் நகர் (Sarkarai Chettiar Nagar), ஹோப் காலேஜ் (Hope College) முதல் சிவில் ஏரோ (Civil Aero) வரை, வரதராஜபுரம் (V.R.Puram), நீலிக்கோணாம்பாளையம் (N.K.Palayam),
கிருஷ்ணாபுரம் (Krishnapuram), ஹவுசிங் யூனிட் (Housing Unit), சிங்காநல்லூர் (Singanallur), ஒண்டிப்புதூர் (Ondipudur), ஜி.வி.ரெசிடென்சி (G.V.Residency), மசக்காளிபாளையம் (Masakkalipalayam), உப்பிலிபாளையம் (Uppilipalayam) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.
கதிர்நாயக்கன்பாளையம் துணை மின்நிலையம்:
கதிர்நாயக்கன்பாளையம் (Kathirnaickenpalayam), ராக்கிபாளையம் (Rakkipalayam), குமாரபுரம் (Kumarapuram), நாச்சிமநாயக்கன்பாளையம் (Naasimanaickenpalayam), பம்பாய் நகர் (Bombay Nagar), டீச்சர்ஸ் காலனி (Teachers Colony), கணேஷ் நகர் (Ganesh Nagar), ஸ்ரீராம் நகர் (Sri Ram Nagar), தொப்பம்பட்டி (Thoppampatty) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.
எனவே, பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மின்வாரிய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேற்குறிப்பிட்ட பகுதிகள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.


