கோவையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; பள்ளி வேன் டிரைவர் போக்சோவில் கைது

கோவை: கோவையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனியார் பள்ளி வேன் டிரைவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

கோவையை சேர்ந்த 6 வயது சிறுமி, தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமியின் தந்தை உயிரிழந்த நிலையில், அவரது தாய் பெங்களூருவில் வேலை செய்து வருவதால், சிறுமி தனது பாட்டி வீட்டில் தங்கி வந்துள்ளார்.

பள்ளி விடுமுறை காரணமாக சிறுமியின் தாய் கோவை வந்து, தனது மகளை பெங்களூருவுக்கு அழைத்துச் சென்றார். அப்போது சிறுமி மிகவும் சோர்வாக இருந்ததை கவனித்த தாய், காரணம் குறித்து கேட்டுள்ளார்.

Advertisement

அதற்கு சிறுமி உடலில் வலி இருப்பதாக தெரிவித்தார். பின்னர் பரிசோதித்தபோது காயம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த தாய், மேலும் விசாரித்துள்ளார்.

அப்போது பள்ளி முடிந்ததும் வேனில் முதலில் ஏறும் நேரத்தில், வேன் டிரைவர் சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் சிறுமி அழுதபடி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து சிறுமிக்கு பெங்களூருவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் கோவை மாநகர கிழக்கு மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

Advertisement

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனியார் பள்ளி வேன் டிரைவர் கணேசன் (43) என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

நெய்யால் ஆறு விஷம்?- புதிய அரசு நடவடிக்கை எடுக்க பாமக கோரிக்கை…

கோவை: நொய்யல் ஆற்றில் கழிவுநீர் கலக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பாட்டாளி மக்கள் கட்சியினர் மனு அளித்துள்ளனர். கோவை மாவட்டத்தில் உருவாகும் நொய்யல் ஆற்றில் அதிகப்படியான தொழிற்சாலை கழிவுகள் கலக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து...

Video

கோவையில் சிக்கன் கடையில் வாலிபர் கைவரிசை- சிசிடிவி காட்சிகள் வெளியீடு…

கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.3,500-ஐ வாலிபர் ஒருவர் திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.