வடவள்ளியில் அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளை; சிசிடிவி காட்சிகள் ஆய்வு

கோவை: கோவை வடவள்ளி பகுதியில் அடுத்தடுத்து உள்ள மூன்று வீடுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கொள்ளை நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வடவள்ளி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

வடவள்ளி கஸ்தூரிநாயக்கன்பாளையம், நேரு நகர் 2-வது வீதியில் அடுத்தடுத்து அமைந்துள்ள மூன்று வீடுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்ததை அப்பகுதி மக்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து வீட்டு உரிமையாளர்களான சந்திரசேகரன், செந்தில்குமார், கிருஷ்ணராஜ் ஆகியோருக்கும், வடவள்ளி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், மூன்று வீடுகளிலும் சோதனை மேற்கொண்டு முதற்கட்ட விசாரணையை தொடங்கினர். மேலும், சம்பவம் நடைபெற்ற பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி, கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில், வீட்டு உரிமையாளர்களை தொடர்புகொண்ட போலீசாரிடம், அவர்கள் வெளியூரில் இருப்பதாகவும், கோவை நோக்கி திரும்பி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Advertisement

வீட்டு உரிமையாளர்கள் வந்த பின்னரே வீடுகளில் இருந்து என்னென்ன பொருட்கள் திருடப்பட்டுள்ளன, எவ்வளவு மதிப்பிலான பொருட்கள் கொள்ளை போயுள்ளன என்பது குறித்து முழுமையான தகவல் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை பிடிக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Advertisement

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

விரட்டும் நாய்கள்; கோவையில் நடுக்கத்தை ஏற்படுத்தும் சி.சி.டி.வி. காட்சிகள்!

கோவையில் சைக்கிளில் சென்றவரை தெருநாய்கள் ஆக்ரோஷமாக துரத்திய சி.சி.டி.வி காட்சி வைரல்; சிறுமியை துரத்திய சம்பவத்தால் பொதுமக்கள் அச்சம்.

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...