Coimbatore Weather: மக்களே கோடை மழைக்கு ரெடியா இருங்க!

Coimbatore Weather: கோவையில் இந்த வாரம் கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோவையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. பகல் நேரத்தில் சுட்டெரிக்கும் வெப்பத்தால் மக்கள் வீட்டில் இருந்து வெளியேறவே அச்சப்படும் சூழல் நிலவுகிறது.

இரவு நேரத்திலும் புழுக்கம் அதிகமாக உணரப்படுவதால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கடும் அவதியில் உள்ளனர். இதனிடையே கோவை மாவட்டத்தில் இந்த வாரம் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

அதன்படி இந்த வார வானிலை முன்னறிவிப்பை இங்கே காணலாம்:

ஏப்ரல் 14 (செவ்வாய்): பகலில் வெப்பம் அதிகமாக இருக்கும். வானம் பகுதியளவில் மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழைக்கு வாய்ப்பு. வெப்பநிலை குறைந்தபட்சம் 25°C முதல் அதிகபட்சம் 38°C வரை பதிவாக வாய்ப்புள்ளது.

Advertisement

ஏப்ரல் 15 (புதன்): நாளை வெப்பம் மேலும் அதிகரிக்கும். மாலை அல்லது இரவு நேரத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறைந்தபட்சம் 25°C முதல் அதிகபட்சம் 39°C வரை வெப்பம் பதிவாகலாம்.

ஏப்ரல் 16 (வியாழன்): பகலில் கடும் வெப்பம் நிலவும். மேகமூட்டத்துடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்சம் 39°C வரை வெப்பம் வாட்டும்.

ஏப்ரல் 17 (வெள்ளி): வானம் பகுதியளவில் மேகமூட்டத்துடன் இருக்கும். மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறைந்தபட்சம் 25°C முதல் அதிகபட்சம் 39°C வரை வெப்பம் பதிவாகும்.

ஏப்ரல் 18 (சனி): மாலை நேரத்தில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வெப்பநிலை முந்தைய தினம் அளவிலேயே நீடிக்கும்.

ஏப்ரல் 19 (ஞாயிறு): அதே வெப்பநிலை நீடிக்கும். மேகமூட்டத்துடன் லேசான மழை வாய்ப்புள்ளது.

மொத்தத்தில், கோவையில் அடுத்த சில நாட்களுக்கு கடும் வெப்பம் காணப்படும். அதே நேரத்தில் வெயிலுக்கு இதமான மழையும் பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடும் வெயிலில் பணியாற்றும் உங்கள் உறவுகள், நண்பர்களுக்கு இந்த செய்தியை பகிர்ந்து உதவுங்கள் வாசகர்களே…

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

குப்பை கொட்டும் பழக்கத்தால் ஆபத்து… கோவை மக்களுக்கு முக்கிய அறிவுரை

கோவை மாநகரில் பொது இடங்களில் கொட்டப்பட்ட குப்பைகளில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருவதால் கடந்த ஒரு மாதத்தில் தீயணைப்பு துறைக்கு 30 அழைப்புகள் வந்துள்ளன.

Video

கோவையில் சிக்கன் கடையில் வாலிபர் கைவரிசை- சிசிடிவி காட்சிகள் வெளியீடு…

கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.3,500-ஐ வாலிபர் ஒருவர் திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.