கோவையில் கட்டட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்- முன்வைத்த கோரிக்கைகள்…

கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டட தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் AITUC கட்டட தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Advertisement

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓய்வூதியம் 6000 ரூபாய் என்பதை சட்டமாக்க வேண்டும், உடனடியாக வாரிய முடிவு படி 2000 ரூபாய் என்பதை வழங்க வேண்டும், விண்ணப்பித்த அனைவருக்கும் வீடு கொடுக்க வேண்டும் மானியம் கொடுக்க வேண்டும்

தினசரி வேலை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும், வெளி மாநில தொழிலாளர் வருகைக்கு வரம்புக்குள் கொண்டு வர வேண்டும், கல்வி செலவு முழுவதையும் வாரியம் மூலம் வழங்க வேண்டும்

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இயற்கை மரண ஈமச்சடங்கு நிதி வழங்க வேண்டும், நலவாரிய நிதியை விரயம் ஆக்க கூடாது, நல வரியை 3% வசூல் செய்ய வேண்டும், மாவட்டங்களின் நலவாரிய அலுவலகங்களில் ஏஜென்டுகளின் முறைகேடுகளை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டம் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent News

கிருஷ்ணா ஸ்வீட் இனிப்புகளில் வனஸ்பதி எண்ணெயா?- கோவையில் அதன் நிர்வாக இயக்குநர் அளித்த விளக்கம்…

கோவை; கிருஷ்ணா ஸ்வீட் இனிப்புகளில் வனஸ்பதி எண்ணெய் கலக்கப்படுவதாக வெளியான செய்திக்கு அதன் நிர்வாக இயக்குனர் மறுப்பு தெரிவித்துள்ளார். கிருஷ்ணா ஸ்வீட் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் இனிப்புகளில் நெய்க்கு பதிலாக வனஸ்பதி எண்ணெய் கலக்கப்படுவதாக செய்திகள்...

Video

எலுமிச்சை சுத்தி போட்டதில் ஏற்பட்ட தகராறு- கோவை அருகே பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்…

கோவை: எலுமிச்சை பழம் சுத்தி போட்டதில் தகராறு ஏற்பட்டு இரு வீட்டார் மோதிக்கொண்ட சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் காரமடை அருகே புதிதாக வாங்கிய காருக்கு எலுமிச்சை பழம் சுற்றி திருஷ்டி...
Join WhatsApp