கோவை: பினராய் விஜயன் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதை கண்டித்து கோவையில் சிபிஐஎம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கேரள மாநில முன்னாள் முதல்வர் பினராய் விஜயன் இல்லத்திலும் அவருக்கு நெருக்கமானவர்கள் இல்லத்திலும் அலுவலகங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. சோதனை முடிந்து செல்லும் பொழுது பினராய் விஜயனின் ஆதரவாளர்கள் சிலர் அமலாக்க துறை அதிகாரிகள் சென்ற காரை தாக்கினர்.
இந்நிலையில் அமலாக்கத் சோறை சோதனையை கண்டித்து கோவையில் சிபிஐஎம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக அரசை கண்டித்தும் காங்கிரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்தப் ஆர்ப்பாட்டம் சிபிஐஎம் மாவட்ட செயலாளர் பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது அமலாக்கத்துறை வருமானத்துறை பொய் வழக்கு போடக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டது. மேலும் பாஜக ஆளுகின்ற மாநிலத்தில் எந்த ஒரு சோதனைகளும் நடைபெறுவதில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது.





Comments are closed.