பினராய் விஜயன் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை- கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம்…

கோவை: பினராய் விஜயன் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதை கண்டித்து கோவையில் சிபிஐஎம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கேரள மாநில முன்னாள் முதல்வர் பினராய் விஜயன் இல்லத்திலும் அவருக்கு நெருக்கமானவர்கள் இல்லத்திலும் அலுவலகங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. சோதனை முடிந்து செல்லும் பொழுது பினராய் விஜயனின் ஆதரவாளர்கள் சிலர் அமலாக்க துறை அதிகாரிகள் சென்ற காரை தாக்கினர்.

இந்நிலையில் அமலாக்கத் சோறை சோதனையை கண்டித்து கோவையில் சிபிஐஎம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக அரசை கண்டித்தும் காங்கிரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்தப் ஆர்ப்பாட்டம் சிபிஐஎம் மாவட்ட செயலாளர் பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது.

Advertisement

இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது அமலாக்கத்துறை வருமானத்துறை பொய் வழக்கு போடக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டது. மேலும் பாஜக ஆளுகின்ற மாநிலத்தில் எந்த ஒரு சோதனைகளும் நடைபெறுவதில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

காவலர்கள் தாக்கியதால் மகனுக்கு ஏற்பட்ட நிலை- கோவையில் தாய் வேதனை…

கோவை: காவலர்கள் தாக்கியதில் மகனுக்கு வலிப்பு ஏற்பட்டதாக தாயார் தெரிவித்துள்ளார். கோவையில் காவல் நிலையத்தில் 24 வயது இளைஞர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டதால், வலிப்பு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது...

Video

மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை விழுங்க முயன்ற 13 அடி ராட்சத மலைப்பாம்பு – பரபரப்பான மீட்பு!

மேட்டுப்பாளையம் பகுதியில் ஆட்டினை விழுங்க முயன்ற 13 அடி ராட்சத மலைப்பாம்பு மீட்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.