கோவை: கோவையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் (29.05.2026) அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், முதுநிலை மண்டல மேலாளர் (தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கு)பழனிகுமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அழகிரி விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண்மை துறை சார்பாக இரசாயன மற்றும் அங்கக உரங்கள் தொடர்பான கருத்துக் காட்சியும், வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை சார்பாக இரண்டு உழவர் உற்பத்தியாளர் நிறுவன மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தொடர்பாக கருத்துக்காட்சியும் தோட்டக்கலை துறை சார்பாக திரவ நிலை அங்கக உயிர் உரங்கள் குறித்த கருத்துக்காட்சியும்,
தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை லிட் நிறுவனத்தின் சொந்த தயாரிப்பான வேளாண் இடுபொருட்கள் காட்சியும், வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை சார்பாக இரண்டு உழவர் உற்பத்தியாளர் நிறுவன மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தொடர்பாக கருத்துக்காட்சியும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.
மேலும் இக்கூட்டத்தில் விவசாயிகள் நீர் வழிப்பாதையிலுள்ள முட்புதர்களை அகற்றவும், குளம், குட்டை ஆக்கிரமிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கவும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் குளம்குட்டைகளை தூர்வாருமாறும்சாலையோரங்களிலுள்ள முட்புதர்களை அகற்றவும், தென்னை நார் கழிவுகள் மூலம் நிலத்தடி நீர் மாசுபடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவும்.
காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்திடவும், சட்டபூர்வமற்ற நில அபகரிப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறும், நொய்யல், கௌசிகா நதி மற்றும் பவானி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.



