குரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் குரூப் 1 தேர்வு மற்றும் குரூப் 1ஏ தேர்வுக்கான அறிவிப்பாணையை டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் மற்றும் தீயணைப்பு, வேலைவாய்ப்பு மாவட்ட அலுவலர் பணியிடங்கள் குரூப் 1 தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன.

Advertisement

இதனிடையே குரூப் 1, குரூப் 1ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணையை டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.கு

குரூப் 1 முதல்நிலைத் தேர்வு ஜூன் மாதம் 15ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வுகளுக்கு இன்று முதல் வரும் ஏப்ரல் மாதம் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் பதவிக்கும் இந்த முறை குரூப் 1 தேர்வு நடத்தப்படுகிறது. குரூப் 1ல் மொத்தம் 70 பணியிடங்களும், குரூப் 1 ஏ தேர்வு மூலம் 2 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Video

கோவையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து- பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்…

கோவை: செட்டிபாளையம் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. கோவை மாநகர போத்தனூர்- செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடேனில்...