கோவை: கோவைக்கு இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கோவை மாவட்டத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை நீலகிரி திருப்பூர் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில தினங்களாகவே கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருகிறது.
அதன்படி கோவை நீலகிரி திருப்பூர் மற்றும் கடலோர மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் இன்று கன மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை எச்சரிக்கை காரணமாக கடலோர மாவட்டங்களில் உள்ள மக்கள், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


