கோவை: கோவையில் ஜூவல் ஒன் நிறுவனத்தின் புதிய 5 தளங்கள் கொண்ட பிரம்மாண்ட ஃபிளாக்ஷிப் ஷோரூமை நிறுவனர் கே. சீனிவாசன் திறந்து வைத்தார்.
கோயம்புத்தூரில் ஜூவல் ஒன் நிறுவனத்தின் புதிய பிரம்மாண்ட ஃபிளாக்ஷிப் ஷோரூமை அந்நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் எமரால்ட் ஜுவல் இண்டஸ்ட்ரி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் கே. சீனிவாசன் திறந்து வைத்தார்.
தங்கம் மற்றும் வைர நகை வணிகத்தில் தரம், பாரம்பரியம் மற்றும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்குப் பெயர் பெற்ற ஜூவல் ஒன் நிறுவனம், தனது புதிய ஃபிளாக்ஷிப் ஷோரூமை கோயம்புத்தூர் கிராஸ் கட் சாலையில் திறந்துள்ளது.
42 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட எமரால்ட் ஜுவல் இண்டஸ்ட்ரி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் கே. சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழாவில், புதிய ஷோரூம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.
நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த 5 தளங்கள் கொண்ட பிரம்மாண்ட ஷோரூமில், தங்க நகைகளுக்கான “Gold Gallery”, வைர நகைகளுக்கான “Diamond Atelier”, மணப்பெண் நகைகளுக்கான “Bridal Pavilion”, தனிப்பயன் நகை வடிவமைப்புகளுக்கான “The One Lounge” மற்றும் வெள்ளி நகைகள், வெள்ளிப் பொருட்களுக்கான “Silver Studio” உள்ளிட்ட பிரத்யேக பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், 7 லட்சத்துக்கும் அதிகமான நகை வடிவமைப்புகள், 20-க்கும் மேற்பட்ட மேம்பட்ட தொழில்நுட்ப வசதிகள், 100 சதவீதம் நம்பகத்தன்மை கொண்ட 916 ஹால்மார்க் தங்க நகைகள் மற்றும் வைர நகைகளுக்கு முழுமையான எக்ஸ்சேஞ்ச் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் வாடிக்கையாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய அடையாளத்துடன் உலகத் தரம் வாய்ந்த நகை வாங்கும் அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஷோரூம் திறப்பு விழாவில், கோவையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.



