கோவை: கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் அமைச்சர் சம்பத்குமார் தீடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தவெக அரசு பொறுப்பேற்றது முதல் நாள்தோறும் அமைச்சர்கள் தொடர் ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு பகுதியில் எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் இன்று நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்டார். அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையில் அனைவரும் பணியில் இருக்கிறார்களா? பதிவேடுகள் அனைத்தையும் ஆய்வு செய்தார். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் இரவு நேரத்தில் செயல்படும் சிகிச்சை பிரிவுகள் , வெளி நோயாளிகள் பிரிவு, குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். நள்ளிரவு நேரத்தில் அதிகாரிகள் யாருமின்றி, அவர் மட்டும் கோவை அரசு மருத்துவமனைக்கு வருகை புரிந்து ஆய்வு மேற்கொண்டார்.
கடந்த வியாழக்கிழமை அன்று அமைச்சர் சம்பத்குமார் கோவை அரசு மருத்துவமனையில் அதிகாரிகள் மருத்துவமனை முதல்வர் மருத்துவர்களுடன் ஆய்வு மேற்கொண்ட பொழுது பல்வேறு குறைபாடுகள் குற்றச்சாட்டுகள் சுட்டிக்காட்டப்பட்ட போது நான் சர்ப்ரைஸ் விசிட் மேற்கொண்டு ஆய்வுகள் மேற்கொள்வேன் என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது


