பெண்களை அவமதிக்கும் வகையில் பேச்சு இடம்பெற்றதாக குற்றம்சாட்டி, தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் சென்னை திரு.வி.க. நகரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் பல்கலைக்கழக விடுதியில் வழங்கப்பட்ட இரவு உணவில் புழு இருந்ததாக மாணவர்கள் குற்றம்சாட்டி, நள்ளிரவில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிர்வாகத்தின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.
உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு, தாய்ப்பாலின் அவசியம், குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அதன் பங்கு மற்றும் தாய்ப்பால் வழங்க முடியாத குழந்தைகளுக்கு தாய்ப்பால் தானம் செய்து உயிர்காக்கும் பெண்களின் சேவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வுகள் கோவையில் நடைபெற்று வருகின்றன.