பிரிந்த காதல் மனைவி: கோவையில் போட்டோகிராப்பர் விபரீத முடிவு!

கோவை: காதல் மனைவி பிரிந்து சென்றதால் கோவையில் போட்டோகிராப்பர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் அஜய் கிருஷ்ணன் (28). போட்டோகிராப்பர்.

இவர், கோவை வடவள்ளியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இவர் சென்னையை சேர்ந்த புவனேஸ்வரி என்பவரை கடந்த சில வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

இந்த நிலையில் அஜய் கிருஷ்ணனுக்கு மது பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் அடிக்கடி மது குடித்து வந்து அஜய் கிருஷ்ணன் தனது மனைவி புவனேஸ்வரியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார்.

இதன் காரணமாக புவனேஸ்வரி தனது கணவர் மீது கோபம் கொண்டு அவரை பிரிந்து சென்றார். இதனால் அஜய் கிருஷ்ணன் மனவேதனையுடன் இருந்து வந்தார்.

நேற்று வீட்டில் தனிமையில் இருந்த அஜய் கிருஷ்ணன் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவை விருந்தீஸ்வரர் கோவில் திருவீதி உலா அன்னதானம்…

கோவை: வடமதுரை அருள்மிகு விருந்தீஸ்வரர் திருக்கோயில் பிரதோசம் விழா சுவாமி திருவீதி உலா அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது. கோவை துடியலூர் அருகே உள்ள வடமதுரை விருந்தீஸ்வரர் திருக்கோவிலில் பிரதோசம் விழா விமர்சையாக நடைபெற்றது. இதில்...

Video

கோவையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து- பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்…

கோவை: செட்டிபாளையம் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. கோவை மாநகர போத்தனூர்- செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடேனில்...