விஜயின் உரையை ஏற்று மேலை நாட்டில் உள்ள தமிழர்கள் தேர்தலுக்காக காத்திருக்கின்றனர்- கோவையில் செங்கோட்டையன் பேட்டி…

கோவை: மேலை நாடுகளில் இருக்கக்கூடிய தமிழர்கள் தேர்தல் நாளை நோக்கி உள்ளார்கள் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Advertisement

மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் செல்வீரர் கூட்டத்தில் பங்கேற்று விட்டு அக்கட்சியின் மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் விமானம் மூலம் கோவை வந்தடைந்தார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தலைவர்(விஜய்) செயல்வீரர் கூட்டத்தில் இன்று உரையாற்றி இருக்கிறார், அவர் உரையைப் பொறுத்தவரை தெளிவாக தமிழகம் வளம் பெறுவதற்கு, தூய்மையான ஆட்சியை தமிழகத்தில் தருவதற்கு ஊழலற்ற ஆட்சியை தருவேன் என்று முழக்கமிட்டு இருக்கிறார் என குறிபிட்டார்.

அதை ஏற்றுத்தான் இந்தியாவிலும் பல நாடுகளில் உள்ள தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஏறத்தாழ 3 லட்சம் பேர் எப்பொழுது தேர்தல் வரப்போகிறது என்று தேர்தல் நாளை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும் தேர்தல் நாள் அறிவித்தவுடன் மேலை நாடுகளில் இருக்கக்கூடிய 3 லட்சம் பேர் தமிழகம் வந்து வாக்களிக்க உள்ளார்கள் என்றார் மேலும் இது உலக வரலாற்றில் நம்முடைய தலைவர் விஜய் ஒருவருக்கு தான் இந்த புகழ் உள்ளது என தெரிவித்துக் கொள்கிறேன் என கூறி சென்றார்.

Advertisement

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

2 COMMENTS

Comments are closed.

Recent News

பிறப்புச் சான்றிதழில் பெயரை சேர்ப்பதற்கான கடைசி தேதி அறிவிப்பு…

கோவை: பிறப்புச் சான்றிதழில் பெயரை சேர்ப்பதற்கான கடைசி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுசுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவத்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு பிறப்பு, இறப்பு பதிவாளர் தலைமை அலுவலரின் அறிவிப்பின்படி, 01.01.2000-க்கு முன்னும் பின்னும் பதிவு...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...