கோவையில் டேட்டிங் ஆப்; நாதக ஆர்ப்பாட்டம்!

கோவை: டேட்டிங் செயலியை உள்ளிட்டவற்றை தடை செய்ய வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

டேட்டிங் செயலியை தடை செய்ய வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

டேட்டிங் செயலியால் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவதாக பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனால் இளம் சமுதாயம் சீரழிவதாக பொதுமக்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் அச்செயலிக்கான கண்டனங்கள் வலுத்து கொண்டே வருகிறது.

இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சுமார் 50க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் திரண்டு டேட்டிங் செயலி உள்ளிட்டவற்றை உடனடியாக மத்திய மற்றும் மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

இது போன்ற செயலால் பெண்கள் பலரும் பாதிக்கப்படுவதாகவும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பலரது வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்த நாம் தமிழர் கட்சியினர் மத்திய அரசும் மாநில அரசும் உடனடியாக இதில் நடவடிக்கை எடுத்து சட்டரீதிக்கு உட்பட்டு இவற்றை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும் இந்த செயலியின் உரிமையாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பயன்படுத்துபவர்களை விட அதனை செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

எனவே மத்திய மாநில அரசுகள் இரண்டுமே தங்களின் கோரிக்கையை பரிசீலனை செய்து அந்த டேட்டிங் செயலி உள்ளிட்டவற்றை தடை செய்ய வேண்டும், அதன் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

எஸ்.பி.வேலுமணியை புகழ்பாடிய நடிகை விந்தியா…

கோவை: கோவையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணியை நடிகை விந்தியா புகழ்ந்தார். கோவை, பேரூர், செட்டிபாளையம் பகுதியில் நடைபெற்ற அ.தி.மு.க-வின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளரும், பிரபல நடிகையுமான விந்தியா,...

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.