ஊதியம் கிடைக்காமல் கோவை 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் அவதி

கோவை: ஊதியம் கிடைக்காமல் அவதிப்படுவதாகவும், உடனே ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

Advertisement

இது குறித்து அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கோவை மாவட்டத்தில் தினமும் 24 மணி நேரமும் சுழற்சி அடிப்படையில் மருத்துவ அவசரகால நிபுணர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் 300க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகிறோம்.

சட்டவிரோதமான 12 மணி நேர வேலை, குறைந்த ஊதியம் என்றபோதிலும் உயிர் காக்கும் பணியை செய்து வருகிறோம்.

Advertisement

இதனிடையே நாங்கள் பணிபுரிந்த ஜனவரி மாதத்திற்கான ஊதியம் எங்களுக்கு வழங்கப்படவில்லை. இது நேர்மையற்ற தொழில் நடைமுறையாகும்.

எனவே தொழிலாளர் நலத்துறை மூலம் சம்பந்தப்பட்ட EMRI-GHS நிர்வாக அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, எங்களுக்கு ஜனவரி மாத நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும்.

Advertisement

மேலும், இனிவரும் காலங்களில் ஒவ்வொரு மாதமும் இது நாள் வரையில் நடைமுறையில் இருந்தது போல 1ஆம் தேதி ஊதியம் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Flipkart Link 1
Dev Mithran
Dev Mithran
Dev Mithran has 3 years of experience in the media field and is currently working as a content writer for News Clouds Coimbatore. He covers a wide range of beats including crime, politics, and lifestyle, bringing accurate, engaging, and audience-focused reporting to digital news.

Recent News

கோவையில் காரை தாக்க முயன்ற காட்டு யானை- அதிர்ச்சி தரும் வீடியோ காட்சி…

ஆனைகட்டி மலைச்சாலையில் காட்டு யானை காரை தாக்க முயன்ற பரபரப்பு வீடியோ வெளியாகியுள்ளது. அதிர்ஷ்டவசமாக வாகன ஓட்டி வேகமாக காரை இயக்கி உயிர் தப்பினார்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...