கோவை: கோவையில் வாடகைக்கு வீடு எடுத்து விபச்சாரம் நடத்திய புரோக்கர் மற்றும் பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கவுண்டம்பாளையம் அருகே உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவானந்தம் இவருக்கு (வயது 21). இவர் வடமதுரை விஐபி காலனி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது போது அவரைச் சந்தித்த நபர் ஒருவர், தன்னிடம் அழகான பெண் இருப்பதாகவும், பணம் கொடுத்தால் அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருக்கலாம் என்றும் ஆசைவார்த்தை கூறினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஜீவானந்தம், ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்துவிட்டு வருவதாகக் கூறிவிட்டு அங்கிருந்த சென்றார்.
வீட்டில் விபச்சாரம்
மேலும், இது தொடர்பாக துடியலூர் போலீசாருக்கு செல்போன் மூலம் அழைத்து புகார் செய்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் தவசியப்பன் மற்றும் போலீசார் சென்றனர்.
அப்போது விஐபி காலனியில் வீட்டை வாடகைக்கு எடுத்து, குடும்பம் நடத்துவது போல் அக்கம்பக்கத்தில் காட்டிக்கொண்டு, இளைஞர்களை ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
தொடர்ந்து அந்த வீட்டில் இருந்த சாய்பாபா காலனியைச் சேர்ந்த 26 வயது பெண் மற்றும் இளைஞர்களை குறிவைத்து விபச்சாரத்திற்கு அழைத்த கணபதி காந்தி தெருவைச் சேர்ந்த அசோக் குமார் (வயது 28) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் அவர்களை சிறையிலடைத்தனர்.
மோசடி கும்பல்
இதுகுறித்து போலீசார் கூறுகையில், “கோவையில் விபச்சாரத்திற்கு அழகிய பெண்கள் இருப்பதாக ஆசை வார்த்தை கூறி, தனியாக சிக்குவோரிடம் பணம் பறிக்கும் செயல் அரங்கேறி வருகிறது.
சமீபத்தில் முதியவர் ஒருவரிடம் இதேபோல் ஒரு கும்பல் பணம் பறித்தது. அவர்களை ஆர்.எஸ்.புரம் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்” என்றனர்.

