கோவை விமான நிலையத்தில் Udaan Cafe…! ஒரு டீ-க்கு கூட இனி பெருந்தொகை செலவிடத் தேவையில்லை!

கோவை: கோவை விமான நிலையத்தில் Udaan Yatri Cafe உள்ளிட்ட புதிய வசதிகளை மத்திய அமைச்சர்கள் தொடங்கி வைக்க உள்ளதாக விமான நிலைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Advertisement

கோவை விமான நிலையத்தில் பயணிகளுக்கான பல்வேறு புதிய வசதிகளை மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, இணை அமைச்சர் முரளிதர் மோகல் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கி வைக்க வைக்க உள்ளனர்.

இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு கோவை விமான நிலையத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது.

அப்போது கோவை விமான நிலைய இயக்குனர் முகமது ஆரிஃப் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

Advertisement

கோயம்புத்தூர் விமான நிலையத்தில் நாள்தோறும் 28 முதல் 30 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இண்டிகோ, ஏர் இந்தியா, ஏர்விஸ்டா உள்ளிட்ட விமான நிறுவனங்களின் சேவை வழங்கப்படுகிறது.

டெல்லி, சென்னை, பெங்களூர், அகமதாபாத், சிங்கப்பூர், சார்ஜா உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் கோவையிலிருந்து இணைக்கப்படுகின்றன. பயணிகளுக்கான சேவையை மேம்படுத்தும் வகையில் தற்போது விமான நிலைய விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.

Advertisement

இந்த நிலையில் கோயம்புத்தூர் விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக புதிய வசதிகள் துவங்கப்பட உள்ளன. பயணிகளுக்கு மலிவு விலையில் சிற்றுண்டி வழங்கும் வகையில் Udan yatri cafe திறக்கப்படவுள்ளது.

இதில் குடிநீர், டீ, வடை, அதிரசம் ஆகியவை குறைந்த விலையில் வழங்கப்படும். மேலும், மகளிர் சுய உதவிக் குழுக்களைக் கொண்டு அந்தந்த பகுதிகளில் ஜிஐ டேக் பெற்ற தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கான விற்பனை நிலையமும் நாளை திறக்கப்படுகிறது.

கோவையின் ஜி ஐ டாக் பெற்ற கோவை கோரா காட்டன் விற்பனை நிலையம் நாளை திறக்கப்படுகிறது. மேலும் பயணிகளின் குழந்தைகள் விளையாடுவதற்காக சிறிய அளவிலான சிறுவர்களுக்கான விளையாட்டு பகுதி திறக்கப்படுகிறது.

மேலும், பயணிகளுக்கான நூலக வசதியும் தொடங்கப்பட்டுள்ளது. இவற்றை மத்திய அமைச்சர்கள் தொடங்கி வைக்கின்றனர். வீடியோ கான்பிரன்சிங்கில் இந்த வசதிகளை பிற விமான நிலையங்களிலும் தொடங்கி வைக்கின்றனர்.

குறிப்பாக, தமிழகத்தின் மேற்கு பகுதியின் முக்கிய விமான நிலையமாக உள்ள கோவை விமான நிலையத்தில் இது போன்ற வசதிகள் பயணிகளுக்கு சிறந்த வசதியை தரும். விமான நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் கூடுதல் வசதிகளை உருவாக்கும் மேம்பாட்டுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு முகமது ஆரிஃப் கூறினார்.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் ஆர்ப்பாட்டம்…

கோவை: கோவையில் பால் உற்பத்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி கோவையில் விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். ஆவின் பால் கொள்முதல் விலையை உடனடியாக உயர்த்த வலியுறுத்தி,...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...