கோவை: அரசுப் பள்ளியில் உணவு அருந்தி உடல் பாதைகளால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பள்ளி குழந்தைகள் வீடு திரும்பினர்.
கவுண்டம்பாளையம் அரசு பள்ளியில் மதிய உணவு அருந்தி உடல் உபாதைகளால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பள்ளி குழந்தைகள் வீடு திரும்பினர்.
கோவை கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் அருகில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இன்று மதியம் பள்ளியில் உணவருந்திய பொழுது பல்லி விழுந்தது தெரிய வந்த நிலையில் 40-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது அதனை தொடர்ந்து 43 பள்ளி குழந்தைகள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அரசு மருத்துவமனை முதல்வர் மேற்பார்வையில் குழந்தைகள் நல மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். மேலும் மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையாளர் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் நேரில் வருகை புரிந்து பார்வையிட்டு குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தனர்.
இன்று மதியம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 43 பள்ளி குழந்தைகளும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

