அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முதல் விமானப் பயணம்: ரவுண்ட் டேபிள் இந்தியா – ஜெம் மருத்துவமனை அசத்தல் முயற்சி

கோவை: ஆதரவற்றோர் இல்லங்களைச் சேர்ந்த 30 வசதி வாய்ப்பற்ற குழந்தைகளுக்கு விமானப் பயண அனுபவத்தை வழங்கி ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பினர் நெகிழ்ச்சியை ஏற்படுத்தினர்.

Advertisement

ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பின் ‘பிளைட் ஆப் பேண்டஸி’ (Flight of Fantasy) என்ற இத்திட்டத்தின் மூலம், வசதி வாய்ப்பற்ற குழந்தைகள் வாழ்வில் புதிய நம்பிக்கையைப் பெறவும், பெரிய இலக்குகளை அடையவும் ஆண்டுதோறும் விமானப் பயணம் மற்றும் கல்விச் சுற்றுலாக்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, இன்று (மார்ச் 13) சென்னையைச் சேர்ந்த 30 குழந்தைகள் விமானம் மூலம் கோவைக்கு அழைத்து வரப்பட்டனர். இத்திட்டத்தை கோவை ஆக்மி ரவுண்ட் டேபிள் 133, கோவை பெண்ட்டா ரவுண்ட் டேபிள் 101, மெட்ராஸ் மெட்ரோ ரவுண்ட் டேபிள் 95 மற்றும் ஜெம் மருத்துவமனை ஆகியவை இணைந்து செயல்படுத்தின.

கோவை வந்தடைந்த மாணவர்கள், ரவுண்ட் டேபிள் உறுப்பினர்களுடன் இணைந்து ஜி.டி கார் அருங்காட்சியகம், வனக் கல்லூரி அருங்காட்சியகம் மற்றும் மண்டல அறிவியல் மையம் ஆகிய இடங்களை ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

Advertisement

இது குறித்து கோவை ஆக்மி ரவுண்ட் டேபிள் 133-இன் தலைவர் ஸ்ரீராம் மற்றும் நிர்வாகிகள் கூறுகையில், “கல்வி மூலம் சுதந்திரம் மற்றும் சமூகச் சேவை மூலம் முன்னேற்றம் என்பதே எங்களது நோக்கம். அரசுப் பள்ளி மாணவர்களின் மனதில் பெரிய கனவுகளை விதைக்கவும், சாதிக்க வேண்டும் என்ற ஆசையைத் தூண்டவும் இந்த விமானப் பயணம் ஒரு கருவியாக அமையும்,” எனத் தெரிவித்தனர்.

சமூக நலனில் அக்கறை கொண்டு இத்திட்டத்திற்கு தொடர்ந்து நிதியுதவி மற்றும் ஆதரவு அளித்து வரும் ஜெம் மருத்துவமனைக்கு ரவுண்ட் டேபிள் அமைப்பினர் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.

Advertisement

இந்நிகழ்வில் ரவுண்ட் டேபிள் நிர்வாகிகள் சுபாஷ், ஸ்ரீராம், ஸ்ரீஹரி, ஈஸ்வர், கார்த்திக் குமார் மற்றும் ஹர்ஷவர்தன் உள்ளிட்ட தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

ஆடி 3வது வெள்ளி ஸ்பெஷல்… இறந்த சுமங்கலி வழிபாடு… அதுவும் இந்த நிற ஆடையில்…. வாழ்க்கையே மாறிப்போகும்!

ஆடி மாதம் எப்போதுமே அம்மனுக்கு மிகவும் உகந்த விரத நாட்களாகும். இந்த மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை விரதம் இருந்து வழிபாடு நடத்தினால், நமக்கும், நமது குடும்பத்திற்கும் ஏற்பட்ட எப்படிபட்ட துன்பமும் தீர்ந்து...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...