கோவை: கோவையில் செல்போன் பேசியபோது மாடியில் இருந்து விழுந்து ஜேசிபி ஆபரேட்டர் பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கை வாசலை சேர்ந்தவர் விவேக்(33). இவர் கோவை வடவள்ளி பகுதியில் தங்கி ஜேசிபி ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று விவேக் தனது மனைவி சிவரஞ்சனியிடம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். பின்னர் பேசியவாறே மாடிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவர் எதிர்பாராத விதமாக 2வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதனைப்பார்த்து ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
Read Also: உக்கடம் சோலார் திட்டம் பலன்.. கோவையில் மின் உற்பத்தி அதிகரிப்பு!
ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக நேற்று உயிரிழந்தார். இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

