சென்னை – கோவை விமானக் கட்டணம் மீண்டும் உயர்வு, அதிர்ச்சியில் பயணிகள்…!

கோவை: மூன்று நாட்கள் தொடர் விடுமுறை என்பதால், சென்னை – கோவை விமான கட்டணம் ரூ.16,500 ஆக உயர்ந்துள்ளது.

புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகை என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை இருப்பதால், சென்னை மற்றும் புறநகரப் பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலானோர், இந்த தொடர் விடுமுறையை கழிப்பதற்காக சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய தொடங்கினர்.

இதேபோல் அதிக அளவில் பயணிகள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ததால், சென்னையில் இருந்து கோவைக்கு வரும் விமானங்களின் டிக்கெட் கட்டணங்கள் நேற்று பல மடங்கு உயர்ந்துள்ளன.

இந்நிலையில், சென்னை – கோவை இடையே ரூ.4,966 ஆக இருந்த கட்டணம் ரூ.16,496 ஆக உயர்ந்துள்ளது.

ஏற்கனவே விமான எரிபொருள் விலை அதிகரித்திருப்பதால், விமான டிக்கெட் கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டிருந்தன. இந்நிலையில், தொடர் விடுமுறை காரணமாக உள்நாட்டு விமான கட்டணங்கள் சர்வதேச விமான கட்டணங்களின் அளவுக்கு உயர்ந்துவிட்டதால், பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் வேட்பு மனு தாக்கல் செய்த வானதி சீனிவாசன்- உடன் வந்த ராஜஸ்தான் முதல்வர்…

கோவை: கோவையில் வடக்கு தொகுதி தே.ஜ கூட்டணி வேட்பாளர் வானதி சீனிவாசன் வேட்பு மனு தாக்கல் செய்தார். கோவை வடக்கு தொகுதிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் கூட்டணி கட்சியினருடன்...

Video

கோவையில் கோழியை விழுங்க முயன்ற மலைப்பாம்பு- வனத்துறை மீட்பு…

கோவை: இக்கரை போளூவாம்பட்டியில் விவசாய நிலத்திற்குள் புகுந்த மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டனர். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள இக்கரை போளூவாம்பட்டி பகுதியில், இன்று காலை விவசாயி ஒருவரின் வீட்டின் அருகே புகுந்த மலைப்...