உடலை மெருகேற்ற ஸ்ராய்டுகள் …ஜிம் பயிற்சியாளர் திடீர் உயிரிழப்பு

கோவை :உடலை மெருகேற்றும் நோக்கில் ஊசி மற்றும் மாத்திரைகளை தொடர்ந்து பயன்படுத்தி வந்த ஜிம் பயிற்சியாளர் உயிரிழந்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வடமதுரை குருடம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் குமார் (33). இவர் காளப்பட்டி நேரு நகர் பகுதியில் உள்ள தனியார் ஜிம்மில் பயிற்சியாளராக பணியாற்றி வந்தார்.

உடல் கட்டை அதிகரிக்கவும், உடலை மெருகேற்றவும் வினோத் குமார் சில ஊசிகள் மற்றும் பல்வேறு மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இது உடல்நலத்திற்கு ஆபத்தாக இருக்கலாம் என அவரது குடும்பத்தினர் பலமுறை எச்சரித்தும், அவர் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 8ஆம் தேதி மாலை ஜிம்மில் வினோத் குமார் அசைவின்றி கிடந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த மருத்துவ உதவியாளர்கள் வினோத் குமாரை பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.

Advertisement

இதுகுறித்து தகவலறிந்த பீளமேடு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜிம் பயிற்சியாளர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

குப்பை கொட்டும் பழக்கத்தால் ஆபத்து… கோவை மக்களுக்கு முக்கிய அறிவுரை

கோவை மாநகரில் பொது இடங்களில் கொட்டப்பட்ட குப்பைகளில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருவதால் கடந்த ஒரு மாதத்தில் தீயணைப்பு துறைக்கு 30 அழைப்புகள் வந்துள்ளன.

Video

கோவையில் சிக்கன் கடையில் வாலிபர் கைவரிசை- சிசிடிவி காட்சிகள் வெளியீடு…

கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.3,500-ஐ வாலிபர் ஒருவர் திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.