Breaking: எஸ்.பி.வேலுமணியின் கட்சிப் பதவி பறிப்பு!

கோவை: கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 26 அ.தி.மு.க., நிர்வாகிகளின் கட்சிப் பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்துள்ளார்.

நடப்பு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க., மீண்டும் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அக்கட்சியில் பூசல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தலைமையில் 25 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். மேலும் இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் த.வெ.க., அரசுக்கு ஆதரவாக அவர்கள் வாக்களிப்பு செய்தனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.,வினர் எதிராக வாக்களித்தனர்.

Advertisement

இதனைத் தொடர்ந்து பேரவையிலிருந்து வெளியே வந்த சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தலைமையிலான எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து பேட்டி அளித்தனர்.

Read news:பீர் பாட்டிலுடன் ஆட்சியர் அலுவலகத்தில் புகுந்த இளம்பெண்… “விஜயை பார்க்க வேண்டும்” என அடம்பிடிப்பு- வீடியோ

அந்த பேட்டியில் திமுகவுடன் எடப்பாடி பழனிசாமி பேரம் பேசியதாகவும், தான் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அதிர்ச்சிகர தகவல்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

Advertisement

இந்த நிலையில், கட்சிக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், ஆர். காமராஜ், சி. விஜயபாஸ்கர், தங்கமணி, அன்பழகன், பெஞ்சமின் உள்ளிட்ட 26 நிர்வாகிகளின் அ.தி.மு.க., கட்சிப் பதவியை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பறித்துள்ளார். மேலும், 17 புதிய மாவட்ட செயலாளர்களையும் நியமித்துள்ளார்.

read news: சிங்காநல்லூரைத் தொடர்ந்து கோவையில் மேலும் 10 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன… முதல்வர் விஜய் உத்தரவு அமல்

கோவையைப் பொறுத்தவரையில் கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளராக பதவி வகித்து வந்த எஸ்.பி.வேலுமணியின் பதவி பறிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக முன்னாள் அமைச்சரும் கழக அமைப்புச் செயலாளருமான செ.ம.வேலுச்சாமி அந்த பதவிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

நெய்யால் ஆறு விஷம்?- புதிய அரசு நடவடிக்கை எடுக்க பாமக கோரிக்கை…

கோவை: நொய்யல் ஆற்றில் கழிவுநீர் கலக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பாட்டாளி மக்கள் கட்சியினர் மனு அளித்துள்ளனர். கோவை மாவட்டத்தில் உருவாகும் நொய்யல் ஆற்றில் அதிகப்படியான தொழிற்சாலை கழிவுகள் கலக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து...

Video

கோவையில் சிக்கன் கடையில் வாலிபர் கைவரிசை- சிசிடிவி காட்சிகள் வெளியீடு…

கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.3,500-ஐ வாலிபர் ஒருவர் திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.