கோவை: தன்னை சந்திக்க வருபவர்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார் அமைச்சர் விக்னேஷ்.
தன்னை சந்திக்க வருபவர்கள் நோட்டு, பேனா போன்ற எழுது பொருட்களை வழங்குமாறு மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை அமைச்சரும் கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவுமான விக்னேஷ் தன்னைச் சந்திக்க வருபவர்கள் நோட்டு பேனா பென்சில் போன்ற பொருட்களை வழங்குமாறு அன்பான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தன்னை சந்திக்க வருபவர்கள் மாலை சால்வை பூங்கொத்து மற்றும் பரிசு பொருட்களை தவிர்த்து அதற்கு பதிலாக நோட்டு பேனா பென்சில் மற்றும் எழுது பொருட்களை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நீங்கள் வழங்கும் இந்த பொருட்கள் அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு பேரூதவியாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளார்.


