இன்ஸ்டாகிராம் காதலரை சந்திக்க நள்ளிரவில் காத்திருந்த மாணவி; கோவையில் மீட்ட Pink patrol

கோவை: கோவையில் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான இளைஞரை சந்திக்க வீட்டை விட்டு வெளியேறியதாக கூறிய 21 வயது மாணவியை, நள்ளிரவில் சாலையோரத்தில் பாதுகாப்பாக மீட்ட பிங்க் பேட்ரோல் போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

கோவை சாய்பாபா காலனி பகுதியில் பிங்க் பேட்ரோல் போலீசார் நேற்று இரவு வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நள்ளிரவு 1 மணியளவில் சாலையோரத்தில் இளம்பெண் ஒருவர் தனியாக நின்று கொண்டிருந்ததை கவனித்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர்.

Advertisement

Also Read: கலைத்துறையில் ஆர்வமுள்ள குழந்தைகளுக்கு இலவச பயிற்சி- கோவை ஆட்சியரின் அறிவிப்பு…

விசாரணையில், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான இளைஞரை சந்திப்பதற்காக திருநெல்வேலி செல்ல காத்திருந்ததாகவும், இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை என்றும் அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து, பாதுகாப்பு கருதி அந்த மாணவியை போலீசார் மீட்டு கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும், அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Read news: வீட்டிற்குள் செடி வளர்க்க ஆசையா?

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் ஆய்வுகளை மேற்கொண்ட வீட்டுவசதி வாரியத்துறை அமைச்சர்…

கோவை: கோவையில் வீட்டுவசதி வாரியத்துறை அமைச்சர் பல்வேறு பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டு அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார். கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜ்குமார் தலைமையில் வீட்டுவசதி...

Latest News Coimbatore

Video

கோவையில் பார்க்கிங்கில் இருந்த வாகனங்களின் சீட்டை கிழித்த நபர்- சிசிடிவி காட்சிகள்…

கோவை டவுன்ஹால் பகுதியில் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களின் இருக்கைகளை பிளேடால் சேதப்படுத்திய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.