ஏர் இந்தியா விமான விபத்து- அஞ்சலி செலுத்திய கோவை விமான பயிற்சி மாணவர்கள்

கோவை: ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கோவையை சேர்ந்த விமான பயிற்சி மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்…

Advertisement

கடந்த ஜூன் 12-ம் தேதி ஏர் இந்தியா விமானம் விபத்திற்கு உள்ளான சம்பவம் அனைத்து மக்களிடத்திலும் சோகத்தை ஏற்படுத்தியது. அந்த விபத்தில் 241 பேர் உயிரிழந்தனர். மேலும் விபத்து நடந்த இடத்திலிருந்த பலருக்கும் காயங்கள் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கோவையை சேர்ந்த ஹாப்ஸ் ஏவியேஷன் எனும் அகாடமி சார்பில் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி காந்திபார்க் பகுதியில் நடைபெற்றது.

Advertisement

“விண்ணுக்கு ஓர் கடிதம்” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடைபெற்ற இந்த
நிகழ்ச்சியில் விமானத்துறையை சேர்ந்த மாணவர்கள் அந்த அகாடமியில் ஊழியர்கள் விமான பைலட்டுகள் ஆகியோர் பங்கேற்று மௌன அஞ்சலி செலுத்தினர். பின்னர் ரோஜாப்பூ மற்றும் வெள்ளை பலூனை கையில் ஏந்தி இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அஞ்சலி செலுத்திய வீடியோ காட்சிகள்…

Recent News

விதிகளை மீறினால் அபராதம்: 8 இடங்களில் ஏஐ கேமிரா; கோவை கமிஷனர் தகவல்!

To control speeding and ensure traffic discipline, Coimbatore Police are installing AI-powered cameras at eight points along the newly inaugurated GD Flyover. These cameras will automatically detect violations such as overspeeding, helmet-less driving, and seat belt non-compliance, with violators facing instant fines.

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது. கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Join WhatsApp