கோவையில் கிணற்றில் விழுந்து யானை உயிரிழப்பு

கோவை: கோவை அருகே காட்டுயானை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் சாடிவயல் அடுத்த சோலைப்படுகை என்ற பகுதியில் நள்ளிரவில் மூன்று யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி தோட்டத்திற்குள் புகுந்துள்ளது. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. வனத்துறையினர் யானையை விரட்டும் முயற்சியில் ஈடுப்பட்டனர்.

அப்போது அந்த யானைகள் மீண்டும் காட்டுக்குள் செல்ல முயன்ற நிலையில் இரண்டு யானைகள் வனத்திற்குள் சென்றது. ஒரு யானை மட்டும் அங்கிருந்த தனியாருக்கு சொந்தமான தோட்டத்து கிணற்றில் விழுந்தது. நீர் அதிகமாக இருந்ததால் யானை வெளியேற முடியாமல் உயிரிழந்தது.

உயிரிழந்த யானைக்கு சுமார் 35 வயது இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கிணற்றுக்குள் விழுந்த யானையை மீட்கும் பணியில் வனத்துறையினர், மற்றும் மீட்புப்பணி துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

இச்சம்பவம் அப்பகுதி மக்களையும் யானைகள் ஆர்வலர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

யார் தீர்ந்து போன கட்சி?- ஸ்டாலின் பேச்சுக்கு அமைச்சர் சம்பத் பதில்…

கோவை: யார் தீர்ந்து போன கட்சி என்பது மக்களுக்கு தெரியும், என அமைச்சர் சம்பத்குமார் கோவையில் தெரிவித்துள்ளார். கோவையில் மாற்றுக்கட்சியில் இருந்து தவெகவில் இணையும் இணைப்பு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளை...

Latest News Coimbatore

Video

கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு…

துடியலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தீயணைப்பு வீரர்கள் அதனை உயிருடன் பிடித்தனர்.