காந்திபுரம் மேம்பாலத்திலிருந்து குதித்த சிறுவன் பரிதாப பலி!

கோவை: காந்திபுரம் மேம்பாலத்தில் இருந்து கடந்த 7ம் தேதி கீழே குதித்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் அருகே உள்ள பாரதிநகர் 3வது வீதியை சேர்ந்தவர் ரமேஷ் (43). இவரது மகன் ஜெகன் (17).

காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் டுடோரியல் மையத்தில் பிளஸ் டூ தேர்வுக்காக படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 7ம் தேதி வீட்டில் இருந்து சைக்கிளில் வெளியில் சென்ற ஜெகன் கிராஸ்கட் ரோட்டில் சித்தி விநாயகர் கோயில் அருகில் மேம்பாலத்தில் சைக்கிளை நிறுத்திவிட்டு திடீரென்று கீழே குதித்தார்.
இதில் பலத்த காயமடைந்த அவரை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஜெகன் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

Advertisement

இதுகுறித்து காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

விஜய் பேச்சு அறியாமையின் உச்சம்- கோவையில் அமைச்சர் விமர்சனம்…

கோவை: நடிகர் விஜய் பேசுவது அறியாமையின் உச்சம் என அமைச்சர் மா.சுப்பிரமணியம் விமர்சித்துள்ளார். தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 6.64 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள...

Video

ஆஃபர் என்ற பெயரில் பழைய அதிரசம்; ஆனந்தாஸ் உணவகத்தை விளாசிய வாடிக்கையாளர்! – வீடியோ

கோவையில் 50% சலுகை பெயரில் பழைய அதிரசம் விற்றதாக ஆனந்தாஸ் உணவகத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
Join WhatsApp