கோவை பொள்ளாச்சி அருகே வீட்டின் அருகில் சுமார் 6 அடி உயர கஞ்சா செடி வளர்த்து வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளியை போலீசார் கைது செய்து, செடியை பறிமுதல் செய்தனர்.
கோவை மதுக்கரையில் போலியான GPay ஸ்கிரீன்ஷாட்டைக் காட்டி துணி மற்றும் ரூ.1,500 ரொக்கப் பணம் என மொத்தம் ரூ.2,150 மோசடி செய்த வாலிபர் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நண்பரை சுத்தியல் மற்றும் அரிவாளால் கொலை செய்து, அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட வழக்கில், சிறுவன் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யும் போது தப்பியோட முயன்ற ஒருவருக்கு கை முறிவு ஏற்பட்டது.
உக்கடம் பகுதியில் நள்ளிரவில் வாலிபரின் வீட்டை ஆயுதங்களுடன் முற்றுகையிட்டு கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்தில் 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் பல்கலைக்கழக விடுதியில் வழங்கப்பட்ட இரவு உணவில் புழு இருந்ததாக மாணவர்கள் குற்றம்சாட்டி, நள்ளிரவில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிர்வாகத்தின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.
கோவை மாநகரில் குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 940 ரவுடிகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும், நடப்பாண்டில் 57 ரவுடிகள் மாநகரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கோவை லூலூ மால் பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் இருந்து விலை உயர்ந்த ஹெல்மெட்டை இளைஞர் - இளம்பெண் ஜோடி திருடிச் சென்ற சம்பவம் சிசிடிவியில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
An MBA graduate was allegedly murdered and his body dumped near the forest behind Bharathiar University in Coimbatore. Vadavalli Police have launched an intensive investigation.
கடைசி நேரத்தில் பயணத்தை ரத்து செய்து, மாற்று ஏற்பாடு செய்யாததுடன் கட்டணத்தையும் திருப்பி வழங்காத ஆம்னி பேருந்து நிறுவனத்திற்கு, பாதிக்கப்பட்ட பயணிக்கு ரூ.25,000-க்கும் மேல் இழப்பீடு வழங்க கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கில், விபத்து அதிகம் நடைபெறும் 40 'ஹாட் ஸ்பாட்' பகுதிகளில் போலீசார் மற்றும் அதிகாரிகள் இணைந்து விரிவான ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.