மேற்குத் தொடர்ச்சி மலையில் கனமழை காரணமாக கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி இன்று அருவி மூடப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது.
கலை, அறிவியல், விளையாட்டு, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கான பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
மனித உயிர்களைக் காப்பாற்றிய வீரச் செயல்களுக்கு வழங்கப்படும் இந்திய அரசின் ஜீவன் ரக்க்ஷா பதக்க விருதுகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
சூலூர் அருகே கலங்கல் கிராமம் தென்றல் நகரில் மூன்று நாட்களாக நீடித்த மின்தடையால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், மின்வாரிய ஊழியர்களை முற்றுகையிட்டு சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது; மரங்களை பாதுகாக்கும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
துடியலூர் அருகே தனியார் நிறுவன ஊழியரிடம் இருந்து விலை உயர்ந்த செல்போனை பறித்துச் சென்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும், ஒருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
பீளமேடு ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பாதசாரிகளுக்கான சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி, 26 உயிரிழப்புகளை சுட்டிக்காட்டி பொதுமக்கள் கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வலது கை மணிக்கட்டில் ஏற்பட்ட நீண்டகால காயத்திற்கு கோவை கங்கா மருத்துவமனையில் நடிகர் ராம் சரண் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டார். தற்போது அவர் நலமாக உள்ளார்.