கடைசி நேரத்தில் பயணத்தை ரத்து செய்து, மாற்று ஏற்பாடு செய்யாததுடன் கட்டணத்தையும் திருப்பி வழங்காத ஆம்னி பேருந்து நிறுவனத்திற்கு, பாதிக்கப்பட்ட பயணிக்கு ரூ.25,000-க்கும் மேல் இழப்பீடு வழங்க கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கோவை துடியலூரில் போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் இணைந்து நடத்திய வாகனச் சோதனையில், 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் இருந்து விதிமீறிய ஏர் ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.
கோவை கார் குண்டுவெடிப்பு மற்றும் இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்குகளின் நிதி பரிவர்த்தனை விசாரணை தொடர்பாக, உக்கடம் பகுதியில் மேலும் 5 பேரின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கில், விபத்து அதிகம் நடைபெறும் 40 'ஹாட் ஸ்பாட்' பகுதிகளில் போலீசார் மற்றும் அதிகாரிகள் இணைந்து விரிவான ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
கோவை சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு பணத்தாள்கள் மட்டும் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.