கோவையில் போலீசார் நடத்திய சோதனையில் கஞ்சா விற்பனை மற்றும் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகள் விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கிலோ கணக்கில் கஞ்சா மற்றும் நூற்றுக்கணக்கான லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சாலையோரங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் மேம்பாலங்களின் கீழ் ஆதரவற்ற நிலையில் வாழும் நபர்களுக்கு பாதுகாப்பான தங்குமிடம் மற்றும் மறுவாழ்வு வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்பு உள்ளம் அறக்கட்டளை கோவை மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளது.
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், பா.ஜ.க-வில் இருந்து தனிநபர்கள் விலகுவதால் கட்சிக்கு பாதிப்பு இல்லை என்றும், வெளியே சென்றவர்கள் மீண்டும் திரும்பி வருவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
கோவை மாநகரில் சாலையோரங்களில் கொட்டப்பட்ட குப்பைகளில் அடிக்கடி தீ விபத்துகள் ஏற்பட்டு வருவதால், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தீயணைப்பு துறைக்கு 30-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளன.